கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கோஷ்டி உறுப்பிரான சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்டா’ உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வேகன் ஆர் (வாகன மாடல்) ஒன்றில் வந்து ‘பஸ் பொட்டா’ வை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று இலங்கை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ‘பஸ் பொட்டா’ மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதெவேளை ‘பஸ் பொட்டா’ ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.