‘கொவிட்’ அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்’: தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்!

Date:

‘கொவிட்’ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ‘கொவிட்’ தடுப்பூசியைப் பெறுவதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்பு ‘கொவிட்’ தடுப்பு ஊசி போடப்பட்ட பகுதிகள், வட்டார சுகாதார மருத்துவர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

இன்று (27) காலை முதல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள இராணுவத்தினரால் நடத்தப்படும் ‘கொவிட்’ தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பெருமளவிலான மக்கள் வருகைத் தந்தனர்.

இதேவேளை ‘கொவிட்’ அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

சில காலத்தின் பின்னர் பாடசாலைகள் திறக்கப்படுவதால், அதனைத் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் ‘கொவிட்’ பரிசோதனை செய்யப்படாது என்றும் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...