ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து அமைதியான முறையில் வாபஸ் பெறுவதாக ‘கோட்டா கோ கம’ போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம்/ பழைய பாராளுமன்றம் மற்றும் காலி முகத்திடலை தொடர்ந்தும் ஆக்கிரமித்து போராட்டத்தை முன்னெடுப்போம் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என கோட்டா கோ கம போராட்ட செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.