சட்டப் பின்னணியை ஆராயாமல் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பான அறிக்கைகளை வெளியிடதீர்கள்: சபாநாயகர்

Date:

உண்மைகள் மற்றும் சட்டப் பின்னணியை ஆராயாமல் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவது அரசியலமைப்புச் செயற்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை விதைப்பதாகவும், ஸ்திரத் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொந்தளிப்பான பொது உணர்வைக் கருத்தில் கொண்டு, இந்த செயல்முறையின் தோற்றம் பொருட்படுத்தாமல், இது தொடர்பான கருத்துக்களை அல்லது அறிக்கைகளை அறிக்கை செய்யும் போது பொறுப்புடன் செயல்படுமாறு சபாநாயகர் அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் செயல்முறை அல்லது வேறு ஏதேனும் நாடாளுமன்ற விவகாரம் குறித்துத் தேவையான எந்த விளக்கங்களையும் வழங்க நாடாளுமன்ற அலுவலகம் தயாராக உள்ளது.

அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பது நமது நாட்டின் ஸ்திரத்தன்மை, இயல்புநிலை மற்றும் முன்னேற்றத்தின் அடித்தளமாக உள்ளது.

மேலும் இது பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து குடிமக்களும் அமைப்புகளும் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...