ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி வெளிப்படுத்துமாறு கோரிக்கை!

Date:

நாட்டின் பிரஜைகளுக்கு தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்டு வெளிப்படைத்தன்மை தொடர்பிலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் அறிக்கை பின்வருமாறு,

ஊழல் நிறைந்த தலைவர்களை இனியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை இலங்கை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை பாராளுமன்றத்தில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்டு மக்களின் நம்பிக்கையினை வலுப்படுத்தக்கூடிய வகையிலான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் வெளியிடுவது ஓர் முக்கிய விடயமாக காணப்படுகிறது.

தூய அரசியலுக்கான பொதுமக்களின் அழைப்புக்கு செவிசாய்த்து நாடு எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைவோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் வெளியிட சட்டப்பூர்வமாக கடமையானவர்கள் இல்லை.

ஏன் கடமையானவர்கள் அல்ல என்பதற்கான விளக்கத்தை கீழுள்ள இணைப்பினூடாக தெரிந்து கொள்ளுங்கள்: https://bit.ly/3yKQbfW

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...