ஜமாஅத்தே இஸ்லாமியின் அங்கத்தவர் தேசிய மாநாடு!

Date:

இலங்கை ஐமாஅத்தே இஸ்லாமியின் அங்கத்தவர் தேசிய மாநாடு எதிர்வரும் 2022 ஜூலை 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நான்கு வருடங்களுக்கொரு முறை ஜமாஅத்தின் தலைவர் (அமீர்) தெரிவு நடைபெறவிருப்பதால் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிகழ்வை நேரடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கு தடை ஏற்படும் என்பதால் நாட்டில் ஆங்காங்கேயுள்ள தெரிவு செய்யப்பட்ட 30 நிலையங்களில் 1450 அங்கத்தவரகள் கூடி தலைமையகத்தில் இருந்து நெறிப்படுத்தப்படும் மாநாட்டில் பங்கு பற்றுவார்கள்.

இம்மாநாட்டின் போது தலைவர் (அமீர்) தேர்வுக்கான தேர்தல் நேரடி வாக்களிப்பின் மூலம் நடைபெறும்.

ஜமாஅத்தின் யாப்புக்கமைய நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தலைவர் (அமீர்) தெரிவு செய்யப்படுவார்.

இந்தத் தெரிவு குறிப்பிட்ட வருடத்தின் முஹர்ரம் மாதத்தில் நடைபெற வேண்டும்.

அந்த வகையிலே ஜூலை 31ஆம் திகதி மொத்த அங்கத்தவர்களும் பங்கு பற்றும் இத்தேசிய மாநாடு சூம் தொழில்நுட்பத்தினூடாக நடைபெறுவதாக ஜமாஅத்தே இஸ்லாமியின் உதவிப் பொதுச் செயலாளர் எம்.எச்.எம் ஹஸன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...