ஜூலை 25ம் திகதி விசேடடெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்: அசேல குணவர்தன!

Date:

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 43,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 8,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வுகளின்படி அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள் ஆகியவை டெங்கு பெருக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான அனைத்து காரணிகளையும் கருத்திற்க் கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 25ஆம் திகதி திங்கட்கிழமை விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் டெங்கு பரவும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கவும், டெங்கு ஒழிப்புக்கு பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...