தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக பல வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிர்வரும் சில தினங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வர்த்தகப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி இந்த உரிமத்தைப் பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அங்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும் என அவரது ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் தேசிய எரிபொருள் உரிமம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும்.
Update – National Fuel Pass will be upgraded in the next few days to give an option for BusinessesOrganizations that operate multiple vehicles to register All their vehicles with the Business Registration Number. Each vehicle will be given a specific QR code after verification.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 17, 2022