தேயிலை சாகுபடிக்கு 15, 000 மெட்ரிக் தொன் உரத்தை வழங்க அரசு முடிவு!

Date:

தேயிலை பயிர்ச்செய்கைக்காக 15,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மொத்தமுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தில் 15,000 மெற்றிக் தொன் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் கடன் திட்டத்தின் கீழ் இந்த உரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய பெறப்பட்ட 44,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தில் சுமார் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர்களினால் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது.

காய்கறி சாகுபடிக்கு குறிப்பிட்ட கலப்பு உரத்தை உருவாக்கி, அந்த உரத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சந்தைக்கு விற்பனை செய்வதற்கான திட்டங்களை வகுக்கும்படியும் ஆலோசனை வழங்கினர்.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...