நாளை முதல் QR முறைமை: வாகன இலக்கத்தின் கடைசி எண்ணின்படி எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்!

Date:

நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR  முறையின் கீழ் எரிபொருளை வழங்கும் முறை நாளை (ஆகஸ்ட்1) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கும் முறை நாளை முதல் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் நாளை முதல் QR  முறைப்படி எரிபொருளை விநியோகிக்கவுள்ளன.

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...