நாளை முதல் QR முறைமை: வாகன இலக்கத்தின் கடைசி எண்ணின்படி எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்!

Date:

நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR  முறையின் கீழ் எரிபொருளை வழங்கும் முறை நாளை (ஆகஸ்ட்1) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கும் முறை நாளை முதல் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் நாளை முதல் QR  முறைப்படி எரிபொருளை விநியோகிக்கவுள்ளன.

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...