நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறையின் கீழ் எரிபொருளை வழங்கும் முறை நாளை (ஆகஸ்ட்1) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கும் முறை நாளை முதல் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் நாளை முதல் QR முறைப்படி எரிபொருளை விநியோகிக்கவுள்ளன.
கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.