பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றும் (18) நாளையும் (19) பொதுமக்கள் தமது பிரதேசங்களில் போராட்டங்களை நடத்துமாறு ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“முழு நாடும் ஒன்றிணைந்து தேசத்தை போராட்டக் களமாக மாற்றியதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எம்மால் பதவியில் இருந்து விலகச் செய்ய முடிந்தது” என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நாளை (19) பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.