ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, காலி முகத்திடலில் உள்ள “கோட்ட கோ கம” மற்றும் பாராளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் ஆயுதம் ஏந்திய மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெருமளவானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கு வாரிசை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.