பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம்: பீரிஸ்

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர வெளி வேட்பாளரை அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருப்பதால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவித்த  பீரிஸ், அவர் மிகவும் பொருத்தமான வேட்பாளர் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சி என்ற ரீதியில் வேறு எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கும் முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...