மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை!

Date:

மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மருந்து இறக்குமதியை நிர்வகிப்பது தொடர்பில் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மருந்து உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால், அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி அதற்கான நடைமுறைகளை தயாரிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

உலக வங்கியினால் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 23 மில்லியன் டொலர்களில் இதுவரை 18.6 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளமை இந்த கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...