ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

Date:

முன்னைய விலைக்கு பாடசாலை பருவகாலச் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், அவற்றை பயன்படுத்தி தற்போது ரயில்களில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இம் மாதத்தில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புதிய கட்டண அறிவிப்பிற்கு அமைவாக அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கான பருவகாலச் சீட்டு விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, எந்தவொரு சிக்கலுமின்றி வழமைபோன்று ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினமும் பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வழைமை போன்றே இன்றும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...