‘ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன்’: ஜனாதிபதி ரணில்

Date:

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன், என்று இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஸ்கை’ நியூஸ்’ என்ற ஊடகமொன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தின் பழைய நண்பர் எனக் கூறியதை ரணில் ரணில் கேலி செய்துள்ளார்.

‘ஸ்கை நியூஸ்’ ஊடகவியலாளர் விக்கிரமசிங்கவை ராஜபக்ஷவின் பழைய நண்பர் என்று குறிப்பிட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் எப்போதும் ராஜபக்ஷக்களை எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு நபரையும் நேர்காணல் செய்வதற்கு முன்னர் ஆழமான விசாரணையை மேற்கொள்ளுமாறும் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, மக்கள் கோரிய மாற்றத்தை வழங்குவதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...