‘ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன்’: ஜனாதிபதி ரணில்

Date:

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன், என்று இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஸ்கை’ நியூஸ்’ என்ற ஊடகமொன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தின் பழைய நண்பர் எனக் கூறியதை ரணில் ரணில் கேலி செய்துள்ளார்.

‘ஸ்கை நியூஸ்’ ஊடகவியலாளர் விக்கிரமசிங்கவை ராஜபக்ஷவின் பழைய நண்பர் என்று குறிப்பிட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் எப்போதும் ராஜபக்ஷக்களை எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு நபரையும் நேர்காணல் செய்வதற்கு முன்னர் ஆழமான விசாரணையை மேற்கொள்ளுமாறும் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, மக்கள் கோரிய மாற்றத்தை வழங்குவதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...