‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி போராட்டக்காரர்கள் வசம்: ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Date:

தேசிய தொலைக்காட்சியில் (ரூபவாஹினி) ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தை சுற்றி ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த போராட்டங்கள் காரணமாக அவர்களின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சி கழகத்தின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கான வாய்ப்பையும் அவர்கள் கோரியதாகவும், அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு  அதிகாரிகள் வாய்ப்பளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, ​​தொலைக்காட்சி கழகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (13) நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், முதன்முறையாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்  ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளது.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...