வஜிர அபேவர்தன அமெரிக்க தூதுவரை சந்தித்தார்: சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்து பேச்சு!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது.

இந்த சந்திப்பு கொழும்பு ஹவ்தோர்ன் பிளேஸில் இல் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் வருடத்தில் சாதகமான பலன் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வஜிர அபிவர்தன தெரிவித்தார்.

இதேவேளை நிறுவனங்களின் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலப் பணிகள் குறித்தும் தூதுவருக்கு   வஜிர அபேவர்தன விளக்கமளித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...