வஜிர அபேவர்தன அமெரிக்க தூதுவரை சந்தித்தார்: சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்து பேச்சு!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது.

இந்த சந்திப்பு கொழும்பு ஹவ்தோர்ன் பிளேஸில் இல் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் வருடத்தில் சாதகமான பலன் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வஜிர அபிவர்தன தெரிவித்தார்.

இதேவேளை நிறுவனங்களின் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலப் பணிகள் குறித்தும் தூதுவருக்கு   வஜிர அபேவர்தன விளக்கமளித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...