வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் செயல்படாது!

Date:

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெள்ளிக்கிழமைகளில் திணைக்களத்தை பொது சேவைகளுக்காக திறக்காது என்று டிஎம்டி ஆணையாளர் ஜெனரல் சுமித் சி.கே. அழகோன் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோக தடைகள் தொடர்பான பிரச்சினைகளின் விளைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  வும் அவர் தெரிவித்தார்.

எனவே, இத்திணைக்கள அதிகாரிகள் பொது மற்றும்/அல்லது தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜூன் 27 ஆம் திகதி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம், வெள்ளிக்கிழமைகளில் இத்திணைக்களத்தை திறப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொலைபேசி எண்கள் மூலம் எங்கள் சேவைகள் தொடர்பான எந்த விளக்கத்திற்கும் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு DMT கேட்டுக்கொண்டது.

மேலும் வாகனப் பதிவுகள் மற்றும் இடமாற்றங்களுக்கு – 070 7 677 877, ஓட்டுநர் உரிமங்களுக்கு, – 070 7 677 977 தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலை செய்யாத நேரங்களில் மேற்கண்ட எண்களுக்கு WhatsApp/ Viber/ SMS மூலமாக விசாரணைகளை அனுப்புமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...