16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா!

Date:

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்று 16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா அண்மையில் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் ஜூன் 24 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்கால முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதன்படி 16 நாட்கள் அந்த அமைச்சர் பதவியில் பணியாற்றினார்.

Popular

More like this
Related

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை...