16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா!

Date:

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்று 16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா அண்மையில் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் ஜூன் 24 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்கால முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதன்படி 16 நாட்கள் அந்த அமைச்சர் பதவியில் பணியாற்றினார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...