16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா!

Date:

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்று 16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா அண்மையில் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் ஜூன் 24 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்கால முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதன்படி 16 நாட்கள் அந்த அமைச்சர் பதவியில் பணியாற்றினார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...