22ஆம் திகதிக்கு முன் இலங்கைக்கு பெற்றோல் கப்பல் வருவதற்கு தேவையான ஏற்பாடுகள்!

Date:

எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெற்றோல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலை எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் இலங்கைக்கு கொண்டு வர சப்ளையர் ஒருவர் முன்வந்துள்ளதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அதிக விலையில் பெற்றாலும், பெற்றோல் பங்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலை கொண்டு வருவதற்கு தேவையான முன்பணம் இன்றே செலுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பெட்ரோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள நாணயக் கடிதம் விநியோகிக்கப்பட்டபோதும், வங்கி தரமிறக்கல் காரணமாக இந்த கப்பல் இலங்கைக்கு வர மறுத்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மலேசியாவின் நிறுவனம் ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதியன்று பெட்ரோலை இலங்கைக்கு எடுத்து வர இணங்கியுள்ளது.

அதற்கமைய மலேசியா நிறுவனத்திடம் அதிக விலைக்கு பெட்ரோலை 13ஆம் திகதியன்று கொள்வனவு செய்வதா? அல்லது 22 ஆம் திகதி ஐ.ஓ.சி நிறுவனத்தின் கப்பல் வரும் வரை பெட்ரோல் இல்லாமல் இருப்பதா? என்பதை தீர்மானிக்கவேண்டும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...