22ஆம் திகதிக்கு முன் இலங்கைக்கு பெற்றோல் கப்பல் வருவதற்கு தேவையான ஏற்பாடுகள்!

Date:

எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெற்றோல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலை எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் இலங்கைக்கு கொண்டு வர சப்ளையர் ஒருவர் முன்வந்துள்ளதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அதிக விலையில் பெற்றாலும், பெற்றோல் பங்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலை கொண்டு வருவதற்கு தேவையான முன்பணம் இன்றே செலுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பெட்ரோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள நாணயக் கடிதம் விநியோகிக்கப்பட்டபோதும், வங்கி தரமிறக்கல் காரணமாக இந்த கப்பல் இலங்கைக்கு வர மறுத்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மலேசியாவின் நிறுவனம் ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதியன்று பெட்ரோலை இலங்கைக்கு எடுத்து வர இணங்கியுள்ளது.

அதற்கமைய மலேசியா நிறுவனத்திடம் அதிக விலைக்கு பெட்ரோலை 13ஆம் திகதியன்று கொள்வனவு செய்வதா? அல்லது 22 ஆம் திகதி ஐ.ஓ.சி நிறுவனத்தின் கப்பல் வரும் வரை பெட்ரோல் இல்லாமல் இருப்பதா? என்பதை தீர்மானிக்கவேண்டும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...