3 வருடங்களின் பின்னர் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் ஹஜ் குழு ஜித்தா பயணம்!

Date:

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான இலங்கை ஹஜ் தூதுக் குழுவை இலங்கை தூதுவர் பாக்கீர் அம்சா மற்றும் அவரது குழுவினர் ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனர்.

சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையிலான ஹஜ் குழுவினர் இன்று புனித ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக ஜித்தா புறப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல், முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் சாஹிப் அன்ஸார் மற்றும் ஹஜ் குழு தலைவர் அஹ்காம் உவைஸ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

மூன்று வருடங்களின் பின்னர், இலங்கை முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியின் போதும், வாய்ப்பு கொடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக மற்றும் அரசாங்கத்துக்கும் அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரண்டு வருடங்களின் பின்னர், உலக முஸ்லிம்கள் பரந்தளவில் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...