3 வருடங்களின் பின்னர் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் ஹஜ் குழு ஜித்தா பயணம்!

Date:

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான இலங்கை ஹஜ் தூதுக் குழுவை இலங்கை தூதுவர் பாக்கீர் அம்சா மற்றும் அவரது குழுவினர் ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனர்.

சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையிலான ஹஜ் குழுவினர் இன்று புனித ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக ஜித்தா புறப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல், முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் சாஹிப் அன்ஸார் மற்றும் ஹஜ் குழு தலைவர் அஹ்காம் உவைஸ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

மூன்று வருடங்களின் பின்னர், இலங்கை முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியின் போதும், வாய்ப்பு கொடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக மற்றும் அரசாங்கத்துக்கும் அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரண்டு வருடங்களின் பின்னர், உலக முஸ்லிம்கள் பரந்தளவில் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...