3000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்:பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இன்று!

Date:

ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் கூடுதலாக 3000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று வெள்ளிக்கிழமை தமது போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பமாகி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமரின் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு விசேட அதிரடிப்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று (8) மற்றும் நாளை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

எனினும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 95,96 மற்றும் 97 இன் படி குற்றச் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...