3000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்:பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இன்று!

Date:

ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் கூடுதலாக 3000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று வெள்ளிக்கிழமை தமது போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பமாகி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமரின் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு விசேட அதிரடிப்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று (8) மற்றும் நாளை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

எனினும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 95,96 மற்றும் 97 இன் படி குற்றச் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...