இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து அமெரிக்க தூதுவருடன் ஜனாதிபதி சந்தித்து பேச்சு!

Date:

‘பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில்  எவ்வாறு வந்தது மற்றும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜூலி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவரது செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது ‘எமது நாடுகளும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளனர்.

நல்லாட்சியை ஏற்றுக்கொள்ளும், மனித உரிமைகளை மதிக்கும் மற்றும் அதன் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் இலங்கையில் உறவுகள் மலர்ந்திருக்கும்’ என்று ஜூலி  சுங் கூறினார்.

ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் சந்திப்பொன்றை பகிர்ந்து கொள்வது இது இரண்டாவது தடவையாகும்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...