இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இரகசிய வாக்கெடுப்பின் பின்னர் ஜூலை 20 புதன்கிழமை அன்று இலங்கை நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது, ரணில்; 134 வாக்குகள் பெற்றார். அவருடன் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமாரை 82 வாக்குகள் பெற்றார்.
ஜூலை 15ஆம் திகதி இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.