எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவி: ஜனாதிபதிக்கும் புடினுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

Date:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள ஏரோஃப்ளோட் விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி உரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கு ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் எரிபொருள் கொள்வனவுக்கான கடன் வசதியை வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...