எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவை பாதிப்பு!

Date:

இலவச அம்பியூலன்ஸ் சேவையான “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையானது, நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அதேநேரம், குறிப்பிட்ட 13-20 நிமிடங்களுக்குள் இந்த சேவை அவசரநிலைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அதனை நிவர்த்தி செய்வது தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எனவும் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ்கள் வாகன விபத்துக்கள், அவசர சிகிச்சை மற்றும் பெரிய சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...