எரிபொருள் வரிசையில் காத்திருந்த 60 வயது நபர் உயிரிழப்பு!

Date:

பயாகல பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனியார் நிறுவனமொன்றுக்கு (எலிபன்ட் ஹவுஸ்) சொந்தமான நடமாடும் ஐஸ்கிரீம் வேன் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த ஹிலாரி பெர்னாண்டோ என்ற 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்த அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...