கதிர்காமம் பாத யாத்திரை செல்பவர்களுக்கு கடற்படையால் வசதிகள்!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதற்கமைய தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா செல்லும் வழியில் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன.

கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை ஊழியர்கள் இணைந்து தேவையான மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பிற வசதிகளை வழங்குகின்றனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...