கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘பஸ் பொட்டா’ உட்பட நால்வர் காயம்!

Date:

கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கோஷ்டி உறுப்பிரான சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்டா’ உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வேகன் ஆர் (வாகன மாடல்) ஒன்றில் வந்து ‘பஸ் பொட்டா’ வை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று இலங்கை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ‘பஸ் பொட்டா’ மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதெவேளை ‘பஸ் பொட்டா’ ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...