கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோகம்!

Date:

பெற்றோலிய சேமிப்பு முனையம், புகையிரதங்கள் மற்றும் ட்ரக்டர்கள் மூலம் இன்று (19) முதல் கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) வரை இலங்கைக்கு வந்த 02 டீசல் கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மற்றுமொரு டீசல் கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும் நேற்று, நாட்டிற்கு வந்த பெற்றோல் கப்பல் ஒன்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை இறக்கும் பணிகளும் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக எரிபொருள் விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே, சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்றுமாறு அமைச்சகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...