கொழும்பில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் படை!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளதுடன் நாளை 09ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், இந்த திகதிகளில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை பேரணியாகச் சென்றதன் பின்னர் இந்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொது அமைதியை நிர்வகிக்கவும் விசேட அதிரடிப்படையினருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கட்டளைத் தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இப்பணிகளை மேற்கொள்வதற்கு அதிகளவான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொழும்பு பிரதேசத்திலுள்ள முகாம்கள் மற்றும் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தியோகத்தர்களை அவசர காலங்களில் மேற்படி கடமைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...