சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது? திஸ்ஸ விளக்கம்

Date:

அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கான கலந்துரையாடல் கட்சித் தலைவர்களுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டுக்கான அனைத்துக் கட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அனைத்து கட்சி ஆட்சிக்கு, கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க வேண்டும் மற்றபடி, தனிப்பட்ட எம்.பி.க்களுடன் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சிகளை அரசியல் ரீதியாக பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு ஜனாதிபதி சென்றுள்ளார் என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது.

இந்த நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியை தீர்க்க தேசிய பொறுப்புணர்வுடன் அனைவரது ஆதரவையும் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை ஜனாதிபதிக்கு நாம் கூற விரும்புகின்றோம்.

எம்.பி.க்களுடன் தனித்தனியாகப் பேசாமல், அனைத்துக் கட்சி உடன்பாட்டை எட்டுவதற்காக அரசியல் கட்சித் தலைவர்களுடன் அந்தக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதாகும்.

அனைத்துக் கட்சித் திட்டத்திற்கு உதவவும், நாட்டுக்காக பதவிகளை ஏற்கவும் தயாராக உள்ளவர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என்பதை நாங்கள் கூற விரும்புகிறோம்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...