ஜனாதிபதி தேர்தல்: வாக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்!

Date:

ஜனாதிபதித்தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் ஆரம்பமானது.

இந்நிலையில் நாடு மட்டுமல்லாது முழு உலகமும் இன்று இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருப்பதால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னுதாரணமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மேலும் கூறியதாவது:

எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று என்றே கூற வேண்டும். இந்த விசேட சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் மட்டுமல்ல, முழு நாடும் மற்றும் முழு உலகமும் இன்று பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.

இதன்போது, ​​வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு வருவதைத் தவிர்ப்பதற்கோ அல்லது கைத்தொலைபேசி கையில் இருந்தால் அதனைக் கொடுப்பதற்கோ இரண்டு அதிகாரிகள் இருதரப்பிலும் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளேன்.

ஒருவரின் வாக்கு அல்லது வாக்குச் சீட்டை வெளிப்படுத்துவது அல்லது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது அரசாங்கத்தின் அரசியலமைப்பின் படி எமக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிக்கு எதிரானது என்றே கூற வேண்டும்.

Popular

More like this
Related

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...