ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!

Date:

ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட 17,850,000 ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த பணத் தொகை தொடர்பில் நாளை தினம் நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பணத் தொகை ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து போராட்டக்காரர்களுக்கு கிடைத்திருந்தது.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் அவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்திருந்தனர்.

இது தொடர்பில் கொழும்பு மத்தி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் போராட்டக்காரர்களிடம் இருந்து குறித்த பணத் தொகை பொறுப்பேற்கப்பட்ட நிலையில் குறித்த பணத்தொகை தற்பொழுது கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பின் கீழ் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...