ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி வெளிப்படுத்துமாறு கோரிக்கை!

Date:

நாட்டின் பிரஜைகளுக்கு தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்டு வெளிப்படைத்தன்மை தொடர்பிலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் அறிக்கை பின்வருமாறு,

ஊழல் நிறைந்த தலைவர்களை இனியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை இலங்கை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை பாராளுமன்றத்தில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்டு மக்களின் நம்பிக்கையினை வலுப்படுத்தக்கூடிய வகையிலான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் வெளியிடுவது ஓர் முக்கிய விடயமாக காணப்படுகிறது.

தூய அரசியலுக்கான பொதுமக்களின் அழைப்புக்கு செவிசாய்த்து நாடு எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைவோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் வெளியிட சட்டப்பூர்வமாக கடமையானவர்கள் இல்லை.

ஏன் கடமையானவர்கள் அல்ல என்பதற்கான விளக்கத்தை கீழுள்ள இணைப்பினூடாக தெரிந்து கொள்ளுங்கள்: https://bit.ly/3yKQbfW

Popular

More like this
Related

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...