ஜூலை 25ம் திகதி விசேடடெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்: அசேல குணவர்தன!

Date:

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 43,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 8,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வுகளின்படி அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள் ஆகியவை டெங்கு பெருக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான அனைத்து காரணிகளையும் கருத்திற்க் கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 25ஆம் திகதி திங்கட்கிழமை விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் டெங்கு பரவும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கவும், டெங்கு ஒழிப்புக்கு பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...