2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டிடி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் ஒகஸ்ட் 14ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 45 மையங்களில் நடைபெறவுள்ளது.