தற்போது போராட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களே ஈடுபட்டுள்ளனர்: பிரசன்ன ரணதுங்க

Date:

போராட்ட களத்தில் தற்போது பைத்தியக்காரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என்ற ஒரு கூட்டமே இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (27) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள புராதன புகைப்படங்களில் கையொப்பமிட்ட குழுவினரிடம், இந்த நாட்டிற்கு எவ்வாறான விடுதலை கிடைக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்கள் முழு மனதுடன் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் போராட்டக்காரர்களிடம் இருந்து நாகரீகமற்ற நடத்தையை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும், போராட்டக்காரர்களின் வெறித்தனமான வேலையினால் மக்கள் போராட்டத்தினால் தற்போது சோர்வடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

போராட்டக்காரர்கள் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கீழ்த்தரமாக நடத்தியதாகவும், போராட்டத்தின் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீவிரவாதிகளின் வன்முறைகளை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...