நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் 60 உறவினர்கள் ஹஜ் பயணம்!

Date:

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர், சவூதி மன்னர்  சல்மானின் அழைப்பின் பேரில் விருந்தினராக நியூசிலாந்தில் இருந்து 60 யாத்திரிகர்கள் குழு இந்த ஆண்டு ஹஜ் செய்கிறார்கள்.

இந்த யாத்திரிகர்களில் 2019 ஆம் ஆண்டில் நடந்த கொடூரமான கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் என்பதுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர்.

ஆகஸ்ட் 2019 ஹஜ்ஜின் போது பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் விருந்தளிக்க மன்னர் சல்மான் உத்தரவிட்டார்.

அதன்படி, 2019 ஆம் ஆண்டில் 200 யாத்ரீகர்கள் ஹஜ் செய்ய வந்தனர், தாராளமான முன்முயற்சி மற்றும் அவர்களின் துக்கத்தைப் போக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் அல்லது இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள்  மக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை.

நியூசிலாந்திற்கான சவூதி தூதர் அப்துல் ரஹ்மான் அல்-சுஹைபானி கூறுகையில்,

நியூசிலாந்து யாத்திரிகர்களுக்கு விருந்தளிக்கும் மன்னரின் முயற்சியின் பயனாளிகளான யாத்திரிகர்களின் கடைசி தொகுதியை இந்தக் குழு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அதற்கமைய ‘ஹஜ்ஜுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலைத் தயாரிப்பது தொடர்பில் தூதரகம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

‘தூதரகம், நியூசிலாந்தின் இஸ்லாமிய சங்கங்களின் கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்து, இந்த 200 பேரின் புனிதப் பயணத்தை எளிதாக்கியது.

மேலும், காயமடைந்தவர்களில் பலர் காயங்களினாலோ அல்லது உடல்நலம் மற்றும் மருத்துவ காரணங்களினாலோ பயணிக்க முடியவில்லை, என்று அவர் மேலும் கூறினார்.

அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற 28 வயதான பிரெண்டன் ஹாரிசன் டாரன்ட் என்பவர் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள அல் நூர் மசூதி வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரண்டு மசூதிகளுக்குள் நுழைந்து கொடூரமான தாக்குதல்களை நடத்தினார்.

அவர் அல்-நூர் மசூதியிலும் பின்னர் லின்வுட் இஸ்லாமிய மையத்திலும் வெகுஜன துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார்.

பயங்கரவாதி தனது துப்பாக்கிச் சூட்டைத் தொடர மூன்றாவது மசூதிக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...