பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம்: பீரிஸ்

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர வெளி வேட்பாளரை அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருப்பதால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவித்த  பீரிஸ், அவர் மிகவும் பொருத்தமான வேட்பாளர் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சி என்ற ரீதியில் வேறு எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கும் முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...