“பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் விபச்சாரம் 30% அதிகரித்துள்ளது”

Date:

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக இந்தியாவின் ANI  ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு முகங்கொடுத்து 22 மில்லியன் இலங்கையர்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையையும் எதிர்நோக்கி வருவதாக அந்தச் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை பல குடும்பங்களை கஷ்டத்தின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது என்று ANI தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அன்றாடப் போராட்டங்களோடு இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் குடும்பங்களை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக  ANI செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மோசமான சூழ்நிலையால் நாடு முழுவதும் தற்காலிக விபச்சார விடுதிகள் உருவாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பாலியல் தொழிலாளர் உரிமைக் குழுவான Stand-up Movement Lanka  கருத்துப்படி, இலங்கையில் கடந்த சில மாதங்களில் விபச்சாரத்தில் 30 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், பெண்கள் வாழ்க்கைக்காக பாலியல் தொழிலாளிகளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் சில ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களாக செயல்படுகின்றன, ANI தெரிவித்துள்ளது, பலர் தங்கள் குடும்பங்களுக்கு உணவை வழங்குவதற்கான ஒரே வழி இதுதான் என்று கூறுகிறார்கள்.

‘தற்போதைய நெருக்கடியின் காரணமாக, பல பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

அவர்களில் பெரும்பாலானோர் ஆடைத்; தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ‘கொவிட் தொற்றுக்குப் பிறகு, ஆடை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் நிறைய வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன, தற்போதைய சூழ்நிலை அவர்களை பாலியல் தொழிலாளர்களாக ஆக்க ஊக்குவிக்கிறது’ என்று  SUML இன் நிர்வாக இயக்குனர் அஷிலா டான்டெனியா குறிப்பிட்டார்.

இதேவேளை மாதம் ஒன்றுக்கு ரூ.20,000 முதல் 30,000 வரை சம்பாதிக்கும் சிறுமிகள் மற்றும் பெண்கள், நாளொன்றுக்கு சுமார் ரூ.15,000-20,000 பெறுவது அவர்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறுவதற்கு ஒரு பெரிய காரணம் என்று நம்புவதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...