போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

Date:

உலக வர்த்தக மையத்திற்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

நாளைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியிருந்தனர்.

இவர்கள் கொழும்பு கோட்டை பகுதியில் உலக வர்த்தக மைய கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடையை உடைத்துக்கொண்டு முன்னால் செல்ல முயன்ற போது அவர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் பதற்றநிலைமை உருவாகியுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...