மட்டக்களப்பில் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் சாய்ந்தமருதை சேர்ந்த வைத்தியர் கைது!

Date:

தனது வீட்டுப் பணிப்பெண் பிரசவித்த பின்னர் சிசுவைக் கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு மட்டக்களப்பில் கிணற்றொன்றில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, மட்டக்களப்பு பொலிஸாரின் நீண்ட விசாரணையின் பின்னர், சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய வைத்தியர் சம்பவத்தின் போது மட்டக்களப்பு பகுதியில் வாடகை வீடொன்றில் தனது மனைவியுடன் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வைத்தியரின் வீட்டில் பணிபுரிந்த பெண் பிரசவித்த சிசுவை மூச்சுத் திணறடித்து கொன்றதாக இந்த வைத்தியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...