மே 9 இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை!

Date:

கடந்த மே மாதம் (9) காலிமுகத்திடல் ‘கோட்டா கோ’ கிராமத்தின் மீது கடமை தவறிய பொலிஸ் மா அதிபர் உட்பட விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த விசாரணைக்குப் பிறகு, சம்பவத்தில் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனித ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், சம்பவ இடத்தில் கடமையாற்றிய பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கடமை மீறல் இடம்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சம்பவத்தன்று குழுவினர் அளித்த வாக்குமூலங்களை முறையாக வெளியிடவில்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் தவறிவிட்டனர் எனவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...