விமானப்படை தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி தங்கியிருப்பதாக கூறும் செய்திகளில் உண்மையில்லை!

Date:

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை மறுத்துள்ளது.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் தர்மபால சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தி பொய்யானது என விமானப்படை ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் முன்னாள் அஜித் தர்மபாலவின் வெளிப்படுத்தல் விமானப்படைக்கும் விமானப்படைத் தளபதிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியாகும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இது பொதுமக்களின் கோபத்தை இலங்கை விமானப்படை மீது திருப்பும் முயற்சி என்றும் விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...